மனித இதயமும்,வாகன இஞ்சினும்

ஒரு மருத்துவர் ஒருவர் தன்னுடைய இரு சக்கர வாகனம் ஒன்றை பழுது பார்க்க அருகில் உள்ள பணிமனைக்கு கொண்டு சென்றார்.அங்கிருந்த பணியாளர் வாகனத்தை பரிசோதித்து விட்டு வாகனத்தின் இஞ்சின் பகுதியில் குறைபாடு உள்ளதாகவும் அதை பிரித்து சரி செய்து தருவதாகவும் சொன்னார்.

மருத்துவரும் சிறிது யோசித்து விட்டு சரி தம்பி கொஞ்சம் சீக்கிரம் கொடுங்கள் என்றார்.உடனே வாகனத்தின் இஞ்சின் பகுதியை பிரித்து வேலை செய்ய ஆரம்பித்தான்.

சிறிது நேரத்திற்கு பிறகு அந்த பணியாள் மருத்துவரிடம் கேட்டான் ஐயா நீங்கள் எதில் சிறப்பு பெற்ற மருத்துவர்.அதற்கு மருத்துவர் சொன்னார் நான் ஒரு இருதய அருவை சிகிச்சை நிபுணர்.இருதயத்தில் காணப்படும் பழுதுகளை சரிபார்ப்பது எனது வேலை என்று பதில் அளித்தார்.



ஐயா இந்த இரண்டு சக்கர வாகனத்தில் முக்கியமான பகுதி எது என்று சொல்லுவீர்களா?என்று அந்த பணியாள் மருத்துவரை பார்த்து கேட்டான்.அவரும் இதில் என்னப்பா சந்தேகம்,இஞ்சின் தானே இதில் முக்கியம் என்றார்.

உடனே அந்த பணியாள் சொன்னார் ஐயா மனிதர்களின் முக்கியமான பகுதியான இருதயம் வேலை செய்யாவிட்டால் நீங்கள் அதை பழுது பார்த்து சரி செய்கிறீர்கள்.

நாங்களும் அதே போல் தான் பழுதான இந்த வாகனத்தின் இஞ்சின் பகுதியை பிரித்து பழுது பார்த்து ஓடவைக்கின்றோம்.

ஆனால் நாங்கள் இஞ்சினை பிரித்து பழுது பார்த்தால் எங்களுக்கு நீங்கள் கொடுப்பது வெறும் 500,அல்லது 1000 ரூபாயோ தான்.

ஆனால் நீங்கள் இருதயத்தை பிரித்து பழுது பார்த்து சரி செய்வதற்கு வாங்கும் பணம் ஒரு லட்சமோ அல்லது அதற்கு அதிகமாகவோ உள்ளது.ஏன் ஐயா இந்த பாரபட்சம் என்று கேட்டான்.

இதை கேட்ட அந்த மருத்துவர் ஒருக்கணம் அமைதியாக இருந்து விட்டு பின்பு சொன்னார்


தம்பி நீங்கள் வாகனத்தின் இஞ்சினை பிரிக்கும் பொழுது அதை நிறுத்தி விடுகிறீர்கள்.பின்புதான் அதை சரி செய்கிறீர்கள்.

ஆனால் நாங்கள் மனிதனின் இருதயத்தை பிரிக்கும் பொழுது அதை நிறுத்தாமல் ஓடும் நிலையிலேயே சரி செய்கின்றோம்.இதனால் தான் எங்களுக்கு அதிகம் உங்களுக்கு குறைவு என்று சொன்னார்.

அதன் பிறகு அந்த பணியாள் பேசவே இல்லை...........................

இது எப்படி இருக்கு உங்க கருத்தை சொல்லுங்களேன்

மூளைக்கு விலை என்ன?

இந்திய மூளைக்கு என்ன விலை?

நண்பர்கள் எல்லோருக்கும் வணக்கம்.இன்றைக்கு நாம் படிக்கப்போகு கதை இந்திய மூளைக்கு என்ன விலை என்பதே.தயவு செய்து யாரும் தவறாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.நமக்கு இந்தியாவின் மேல் பற்று இல்லாமல் இல்லை.இதை கதைக்கு மட்டும் எடுத்துக்கொள்ளவும்.

வெளிநாடு ஒன்றில் மருத்துவக் கண்காட்சி ஒன்று நடைபெற்றுக்கொண்டிருந்தது.அதில் மூளைக்கு என்று ஒரு தனி பகுதி ஒதுக்கப்பட்டு இருந்தது.அந்த பகுதியில் எல்லா நாட்டு மூளைகளும் ஒவ்வொரு பாட்டிலில் அடைத்து வைக்கப்பட்டு அதின் மேல் ஒரு வெள்ளை நிற காகிதத்தில் அதன் விலைகள் எழுதப்பட்டு இருந்தது.


ஒரு சுற்றுலா பயனிகள் ஒரு கூட்டமாக சென்று அந்த கண்காட்சியின் நடத்துனர்களிடம் மிகவும் கோபமாக சண்டை போட்டுக்கொண்டிருந்தார்கள்.என்ன விஷயம் என்று கேட்டார் அந்த கண்காட்சியின் மேளாலர்.அவர் உடனே அந்த மூளைகள் வைக்கப்பட்டிருக்கும் இடத்துக்கு அழைத்துச் சென்று அந்த பாட்டில்களை காண்பித்தார்கள்.



அதில் ஜப்பான்-500 டாலர்,இத்தாலி-1000 டாலர்,ஜெர்மன்-1500 டாலர்,அமேரிக்கா-2000 டாலர்,இப்படி பல மூளைகளுக்கு விலை எழுதப்பட்டு இருந்தது கடைசியாக இந்தியா-10,000 டாலர் எழுதப்பட்டு இருந்தது.



அந்த பயணிகள் மிகவும் கோபமாக எங்கள் நாடு எவ்வளவோ கண்டுபிடிப்புகளை உலக்குக்கு அறிமுகப்படுத்தியுள்ளது.ஆனால் அதை எல்லாம் கருத்தில் கொள்ளாமல் எங்கள் நாடுகளை சேர்ந்த மூளைகளுக்கு குறைந்த விலையை நிர்ணயித்து உள்ளீர்கள் என்று கூச்சலிட்டனர்.


உடனே அந்த மேளாலர் சொன்னார் நான் மிகவும் சரியாகத்தான் விலை நிர்ணயம் செய்து இருக்கிறேன்.எப்படி என்று உங்களுக்கு சந்தேகமானால் நான் விளக்கம் சொல்லுகிறேன்.


முதலாவது ஜப்பானை எடுத்துக்கொள்ளுவோம்.இது உலகத்தில் அநேக எலக்ட்ரானிக் பொருட்களை அறிமுகப்படுத்தி தன்னுடைய மூளையை முழுவதுமாக உபயோகித்து உள்ளது எனவே தான் இந்த ஜப்பான் மூளைக்கு 500 டாலர் விலை.


அடுத்து இத்தாலி இதுவும் தன் கண்டு பிடிப்புகளை உலகில் அதிகமாக பரவ விட்டுள்ளது.தன் மூளையில் 90% உபயோகித்து உள்ளது.எனவேதான் இதற்கு 1000 டாலர் விலை.


அடுத்தது ஜெர்மன் இது இஞ்னியரிங் மற்றும் தொழில்நுட்பத்தில் அதிகமாக தன் மூளையை 75% உபயோகித்து உள்ளது.எனவே இதற்கு 1500 டாலர்
அப்புறம் அமேரிக்கா இது இராணுவ தளவாடங்கள்,விண்வெளி ஆராய்ச்சி என்று தன் மூளையை 50% செலவு செய்து விட்டது.மீதம் 50% மிச்சம் உள்ளது எனவே விலை 2000 டாலர்


ஆனால் இந்தியாவை பொருத்தவரை மூளை புத்தம் புதியதாக வைத்துள்ளது.நீங்களே சொல்லுங்கள் உபயோகம் குறைவாக உள்ள பொருளுக்கு விலை எப்பொழுதும் அதிகம் தானே.பார்வையாளர்கள் எல்லோரும் அமைதியாக கலைந்து போனார்கள்.


ஆனால் இங்கு எல்லோரும் என்னை துரத்துவதாக எனக்கு தோன்றுகிறது.என்ன நண்பர்களே சரிதானே!

இந்திய மூளைக்கு என்ன விலை?

நண்பர்கள் எல்லோருக்கும் வணக்கம்.இன்றைக்கு நாம் படிக்கப்போகு கதை இந்திய மூளைக்கு என்ன விலை என்பதே.தயவு செய்து யாரும் தவறாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.நமக்கு இந்தியாவின் மேல் பற்று இல்லாமல் இல்லை.இதை கதைக்கு மட்டும் எடுத்துக்கொள்ளவும்.

வெளிநாடு ஒன்றில் மருத்துவக் கண்காட்சி ஒன்று நடைபெற்றுக்கொண்டிருந்தது.அதில் மூளைக்கு என்று ஒரு தனி பகுதி ஒதுக்கப்பட்டு இருந்தது.அந்த பகுதியில் எல்லா நாட்டு மூளைகளும் ஒவ்வொரு பாட்டிலில் அடைத்து வைக்கப்பட்டு அதின் மேல் ஒரு வெள்ளை நிற காகிதத்தில் அதன் விலைகள் எழுதப்பட்டு இருந்தது.


ஒரு சுற்றுலா பயனிகள் ஒரு கூட்டமாக சென்று அந்த கண்காட்சியின் நடத்துனர்களிடம் மிகவும் கோபமாக சண்டை போட்டுக்கொண்டிருந்தார்கள்.என்ன விஷயம் என்று கேட்டார் அந்த கண்காட்சியின் மேளாலர்.அவர் உடனே அந்த மூளைகள் வைக்கப்பட்டிருக்கும் இடத்துக்கு அழைத்துச் சென்று அந்த பாட்டில்களை காண்பித்தார்கள்.



அதில் ஜப்பான்-500 டாலர்,இத்தாலி-1000 டாலர்,ஜெர்மன்-1500 டாலர்,அமேரிக்கா-2000 டாலர்,இப்படி பல மூளைகளுக்கு விலை எழுதப்பட்டு இருந்தது கடைசியாக இந்தியா-10,000 டாலர் எழுதப்பட்டு இருந்தது.



அந்த பயணிகள் மிகவும் கோபமாக எங்கள் நாடு எவ்வளவோ கண்டுபிடிப்புகளை உலக்குக்கு அறிமுகப்படுத்தியுள்ளது.ஆனால் அதை எல்லாம் கருத்தில் கொள்ளாமல் எங்கள் நாடுகளை சேர்ந்த மூளைகளுக்கு குறைந்த விலையை நிர்ணயித்து உள்ளீர்கள் என்று கூச்சலிட்டனர்.


உடனே அந்த மேளாலர் சொன்னார் நான் மிகவும் சரியாகத்தான் விலை நிர்ணயம் செய்து இருக்கிறேன்.எப்படி என்று உங்களுக்கு சந்தேகமானால் நான் விளக்கம் சொல்லுகிறேன்.


முதலாவது ஜப்பானை எடுத்துக்கொள்ளுவோம்.இது உலகத்தில் அநேக எலக்ட்ரானிக் பொருட்களை அறிமுகப்படுத்தி தன்னுடைய மூளையை முழுவதுமாக உபயோகித்து உள்ளது எனவே தான் இந்த ஜப்பான் மூளைக்கு 500 டாலர் விலை.


அடுத்து இத்தாலி இதுவும் தன் கண்டு பிடிப்புகளை உலகில் அதிகமாக பரவ விட்டுள்ளது.தன் மூளையில் 90% உபயோகித்து உள்ளது.எனவேதான் இதற்கு 1000 டாலர் விலை.


அடுத்தது ஜெர்மன் இது இஞ்னியரிங் மற்றும் தொழில்நுட்பத்தில் அதிகமாக தன் மூளையை 75% உபயோகித்து உள்ளது.எனவே இதற்கு 1500 டாலர்
அப்புறம் அமேரிக்கா இது இராணுவ தளவாடங்கள்,விண்வெளி ஆராய்ச்சி என்று தன் மூளையை 50% செலவு செய்து விட்டது.மீதம் 50% மிச்சம் உள்ளது எனவே விலை 2000 டாலர்


ஆனால் இந்தியாவை பொருத்தவரை மூளை புத்தம் புதியதாக வைத்துள்ளது.நீங்களே சொல்லுங்கள் உபயோகம் குறைவாக உள்ள பொருளுக்கு விலை எப்பொழுதும் அதிகம் தானே.பார்வையாளர்கள் எல்லோரும் அமைதியாக கலைந்து போனார்கள்.


ஆனால் இங்கு எல்லோரும் என்னை துரத்துவதாக எனக்கு தோன்றுகிறது.என்ன நண்பர்களே சரிதானே!

புரபஸரும்,மாணவர்களும்.

புரபஸரும்,மாணவர்களும்.

கல்லூரி ஒன்றில் புரபஸர் பிராக்டிக்கல் பாடம் நடத்திக்கொண்டிருந்தார்.அவர் முன் இருந்த ஒரு டேபிளின் மீது ஒரு கண்ணாடி கிளாஸ் இருந்தது.அதில் கருப்பாக ஏதோ ஒன்று இருந்தது.மாணவர்கள் மிகுந்த ஆர்வமாக அமர்ந்திருந்தனர்.


புரபஸர் பேச ஆரம்பித்தார்"ஹலோ டியர்ஸ் எப்படி இருக்கிறீர்கள்.இன்றைக்கு நாம் ஒரு வித்தியயசமான பிராக்டிக்கல்ஸ் செய்யப் போகிறோம்.நம்முடைய சகிப்புத்தன்மை மட்டும் அல்ல நம்முடைய கூர்மையான பார்வை எப்படி இருக்க வேண்டும் என்று இன்றைக்கு கற்றுக்கொள்ளப் போகிறோம்.


மாணவர்கள் உற்சாகமாக கோரசாக "ஓகே" சார்.


புரபஸர் மீண்டும்"டியர் ஸ்டூடண்ட் இந்த கிளாசில் சாக்கடை நீர் உள்ளது.இதை நான் என்ன செய்கிறேன் என்று பார்த்துக்கொள்ளுங்கள்.அதன் பின் இந்த கிளாசை உங்கள் அனைவரிடமும் தருவேன்.நீங்கள் ஒவ்வொருவரும் அப்படியே செய்ய வேண்டும்.சரியா?


கிளாசை எடுத்து மாணவர்கள் அனைவருக்கும் முன்பாக புரபசர் தன் விரலை அந்த கிளாசில் உள்ள நீரில் முக்கி எடுத்து தன் நாக்கில் வைத்தார்.அனைத்து மாண்வர்களும் முகம் சுளித்துக்கொண்டனர்.கிளாஸ் மாணவர்களிடம் வந்தது.


அனைத்து மாணவர்களும் புரபஸர் என்ன செய்தாரோ அதை அப்படியே முகம் சுளித்துக்கொண்டு செய்தனர்.இரண்டு மூன்று மாண்வர்கள் வாந்தி எடுக்கவும் செய்தனர்.


மாணவர் தலைவன் எழந்தான் சார் நீங்கள் இப்படி செய்தது நியாயமில்லை.எப்படி இந்த சாக்கடை நீரை நாக்கில் வைக்க சொல்லலாம் என்று கேட்டான்.


உடனே புரபஸர் எழுந்து அந்த மாணவனை அமரச் சொல்லிவிட்டு பேச ஆரம்பித்தார்"மை டியர் ஸ்டூடண்ட் உங்களை யார் சாக்கடை நீரை நாக்கில் வைக்க சொன்னது.நான் செய்வது போல் செய்ய சொன்னேன் அவ்வளவுதான்.நான் சாக்கடை நீரை நாக்கில் வைக்கும் படி உங்களுக்கு கற்றுக்கொடுக்கும் அளவுக்கு அறிவில் குறைவுள்ளவனா?நான் என்ன செய்தேன் என்பதை நீங்கள் கூர்ந்து கவனிக்கவில்லை என்பது இதில் இருந்து புரிந்து கொண்டேன்.நான் என்ன செய்தேன் தெரியுமா?கிளாசில் இருந்த தண்ணீரை என் விரலால் நனைத்த்து உண்மைதான்.ஆனால் என் நாக்கில் வைத்த விரல் அந்த நீரில் நனைத்த விரலை இல்லை.மற்றொரு விரலை"என்று கூறினார்.


மாணவர்கள் அனைவரும் வாய் அடைத்து போனார்கள்.

புரபஸரும்,மாணவர்களும்.

கல்லூரி ஒன்றில் புரபஸர் பிராக்டிக்கல் பாடம் நடத்திக்கொண்டிருந்தார்.அவர் முன் இருந்த ஒரு டேபிளின் மீது ஒரு கண்ணாடி கிளாஸ் இருந்தது.அதில் கருப்பாக ஏதோ ஒன்று இருந்தது.மாணவர்கள் மிகுந்த ஆர்வமாக அமர்ந்திருந்தனர்.


புரபஸர் பேச ஆரம்பித்தார்"ஹலோ டியர்ஸ் எப்படி இருக்கிறீர்கள்.இன்றைக்கு நாம் ஒரு வித்தியயசமான பிராக்டிக்கல்ஸ் செய்யப் போகிறோம்.நம்முடைய சகிப்புத்தன்மை மட்டும் அல்ல நம்முடைய கூர்மையான பார்வை எப்படி இருக்க வேண்டும் என்று இன்றைக்கு கற்றுக்கொள்ளப் போகிறோம்.


மாணவர்கள் உற்சாகமாக கோரசாக "ஓகே" சார்.


புரபஸர் மீண்டும்"டியர் ஸ்டூடண்ட் இந்த கிளாசில் சாக்கடை நீர் உள்ளது.இதை நான் என்ன செய்கிறேன் என்று பார்த்துக்கொள்ளுங்கள்.அதன் பின் இந்த கிளாசை உங்கள் அனைவரிடமும் தருவேன்.நீங்கள் ஒவ்வொருவரும் அப்படியே செய்ய வேண்டும்.சரியா?


கிளாசை எடுத்து மாணவர்கள் அனைவருக்கும் முன்பாக புரபசர் தன் விரலை அந்த கிளாசில் உள்ள நீரில் முக்கி எடுத்து தன் நாக்கில் வைத்தார்.அனைத்து மாண்வர்களும் முகம் சுளித்துக்கொண்டனர்.கிளாஸ் மாணவர்களிடம் வந்தது.


அனைத்து மாணவர்களும் புரபஸர் என்ன செய்தாரோ அதை அப்படியே முகம் சுளித்துக்கொண்டு செய்தனர்.இரண்டு மூன்று மாண்வர்கள் வாந்தி எடுக்கவும் செய்தனர்.


மாணவர் தலைவன் எழந்தான் சார் நீங்கள் இப்படி செய்தது நியாயமில்லை.எப்படி இந்த சாக்கடை நீரை நாக்கில் வைக்க சொல்லலாம் என்று கேட்டான்.


உடனே புரபஸர் எழுந்து அந்த மாணவனை அமரச் சொல்லிவிட்டு பேச ஆரம்பித்தார்"மை டியர் ஸ்டூடண்ட் உங்களை யார் சாக்கடை நீரை நாக்கில் வைக்க சொன்னது.நான் செய்வது போல் செய்ய சொன்னேன் அவ்வளவுதான்.நான் சாக்கடை நீரை நாக்கில் வைக்கும் படி உங்களுக்கு கற்றுக்கொடுக்கும் அளவுக்கு அறிவில் குறைவுள்ளவனா?நான் என்ன செய்தேன் என்பதை நீங்கள் கூர்ந்து கவனிக்கவில்லை என்பது இதில் இருந்து புரிந்து கொண்டேன்.நான் என்ன செய்தேன் தெரியுமா?கிளாசில் இருந்த தண்ணீரை என் விரலால் நனைத்த்து உண்மைதான்.ஆனால் என் நாக்கில் வைத்த விரல் அந்த நீரில் நனைத்த விரலை இல்லை.மற்றொரு விரலை"என்று கூறினார்.


மாணவர்கள் அனைவரும் வாய் அடைத்து போனார்கள்.

ஊருல போகிறவன் ,வருகிறவன் பேச்சை எல்லாம் கேட்டால் இப்படித்தான் இருக்கும்.


ஒரு தந்தையும்,மகனும் பட்டணத்துக்கு போய் ஒரு கழுதை வாங்கி வந்தனர்.வரும் வழியில் தந்தை கழுதை மேல் ஏறிக்கொண்டார்.

சிறிது தூரம் சென்றதும் ரோட்டில் போயிக்கொண்டிருந்த ஒரு வழிப்போக்கன் "என்ன கொடுமை இது சின்ன பையனை நடக்க வைத்து விட்டு இந்த கிழவன் சொகுசாக போகிறான் பாரு என்று திட்டிக்கொண்டே போனான்.

உடனே தகப்பன் கழுதையில் இருந்து இறங்கி தன் மகனை கழுதையில் ஏற்றினான்.சிறிது தூரம் போனவுடன் இன்னொருவன் சொன்னான் பாவம் கிழவனை நடக்கவிட்டு இந்த சின்ன பையன் பாரு சொகுசா போறான்.இரண்டு பேறும் ஏறிப்போக வேண்டியது தானே என்று சொல்லிக்கொண்டே சென்றான்.

உடனே அந்த தகப்பனும் மகனுடன் சேர்ந்து கழுதையில் ஏறிக்கொண்டார்.சிறிது தூரம் சென்ற உடன் இன்னொருவன் சொன்னான் படுபாவிகள் பாவம் அந்த வாயில்லா ஜீவனை எப்படி சித்ரவதை செய்கிறார்கள் என்று.

தகப்பனுக்கும்,மகனுக்கும் இது மிகுந்த வருத்தத்தை கொடுத்தது.உடனே கழுதையில் இருந்து இறங்கி இருவரும் நடந்தே வந்தனர்.சிறிது தூரம் சென்றவுடன் வேறு ஒருவன் வந்து சொன்னான் " காசு கொடுத்து கழுதையை வாங்கி அதில் ஏறிப்போகாமல் நடந்து செல்கிறார்கள் முட்டாள்கள் என்று.

என்ன நண்பர்களே ஒன்னுமே புரியவில்லையா?ஊருல போகிறவன் ,வருகிறவன் பேச்சை எல்லாம் கேட்டால் இப்படித்தான் இருக்கும்.நாம எதை செய்தாலும் குறைதான் சொல்லுவார்கள்.ஆகவே மற்றவர்கள் சொல்லும் அனைத்தையும் நடைமுறைப்படுத்தக்கூடாது.

கழுதையும்,மனிதர்களும்

ஒரு தந்தையும்,மகனும் பட்டணத்துக்கு போய் ஒரு கழுதை வாங்கி வந்தனர்.வரும் வழியில் தந்தை கழுதை மேல் ஏறிக்கொண்டார்.

சிறிது தூரம் சென்றதும் ரோட்டில் போயிக்கொண்டிருந்த ஒரு வழிப்போக்கன் "என்ன கொடுமை இது சின்ன பையனை நடக்க வைத்து விட்டு இந்த கிழவன் சொகுசாக போகிறான் பாரு என்று திட்டிக்கொண்டே போனான்.

உடனே தகப்பன் கழுதையில் இருந்து இறங்கி தன் மகனை கழுதையில் ஏற்றினான்.சிறிது தூரம் போனவுடன் இன்னொருவன் சொன்னான் பாவம் கிழவனை நடக்கவிட்டு இந்த சின்ன பையன் பாரு சொகுசா போறான்.இரண்டு பேறும் ஏறிப்போக வேண்டியது தானே என்று சொல்லிக்கொண்டே சென்றான்.

உடனே அந்த தகப்பனும் மகனுடன் சேர்ந்து கழுதையில் ஏறிக்கொண்டார்.சிறிது தூரம் சென்ற உடன் இன்னொருவன் சொன்னான் படுபாவிகள் பாவம் அந்த வாயில்லா ஜீவனை எப்படி சித்ரவதை செய்கிறார்கள் என்று.

தகப்பனுக்கும்,மகனுக்கும் இது மிகுந்த வருத்தத்தை கொடுத்தது.உடனே கழுதையில் இருந்து இறங்கி இருவரும் நடந்தே வந்தனர்.சிறிது தூரம் சென்றவுடன் வேறு ஒருவன் வந்து சொன்னான் " காசு கொடுத்து கழுதையை வாங்கி அதில் ஏறிப்போகாமல் நடந்து செல்கிறார்கள் முட்டாள்கள் என்று.

என்ன நண்பர்களே ஒன்னுமே புரியவில்லையா?ஊருல போகிறவன் ,வருகிறவன் பேச்சை எல்லாம் கேட்டால் இப்படித்தான் இருக்கும்.நாம எதை செய்தாலும் குறைதான் சொல்லுவார்கள்.ஆகவே மற்றவர்கள் சொல்லும் அனைத்தையும் நடைமுறைப்படுத்தக்கூடாது.